அப்பாவிற்காக !!




நான் பிறந்த நொடியில்
மனம் நிம்மதியில் பூரிப்பு
அடைந்தால் என் அன்னை.
என் தந்தையோ !
அடுத்த நொடியில் இருந்து
அவருக்கான வாழ்க்கையை விட்டுவிட்டு
எனக்கு என்று வாழ தொடங்கினர்
அவருக்கான
பிடித்தது பிடிக்காதது எல்லாம்
மறைத்து கொண்டு
எனக்கு பிடித்தது, பிடிக்காதது எல்லாம்
அவருக்கு ஆனாது
எத்தனையோ
சந்தர்ப்பங்களில் உங்களை
நான் பார்த்து வியந்து இருக்கிறேன்.
இருந்தும் உங்கள் மீது ஒரு சிறிய கோபம்
உண்டு
ஆம்!!
சிறிய வயதில் அன்னையின் கை பிடித்து
நடை பழகிய பொழுதில்
தடுக்கி விழுந்து இருக்கிறேன்
அப்பொழுதில் எல்லாம் அன்னை கை
மட்டுமே
தாங்கி பிடித்தது என்னை
பின் நடை பழகிய பின்னும்
நான் உங்கள் கை பிடித்து
நடத்தது இல்லை
ஏன் இந்த இடைவெளி ?
உங்கள் சந்தோஷங்களை மறைத்து கொண்டு
எங்கள் சந்தோஷங்கள்
உங்கள் சந்தோஷமாக மாற்றிகொண்டிர்கள்
எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன
உங்களுக்கும், எனக்கும் இருந்த இடைவெளியின்
அர்த்தம் எப்பொழுது
புரிந்து கொண்டேன்...
அந்த இடைவெளி தான் எனது
முன்னேற்றம் என்றும் ...
உங்கள் கை பிடித்து நடக்க
ஆசைபட்ட, நான்
உங்கள் கை பிடிக்க ஓடிவந்தது தான்
என் வாழ்கை என்றும்..!
இவ்வளவும் செய்த கடவுள்
என்னைப் பெண்ணாக பிறக்க செய்ததை
எண்ணி வருந்துகிறேன்
உங்களை விட்டு பிரிய வேண்டுமே என்று
அடுத்த பிறவியிளாவது
என்னை ஆணாக பிறக்க செய்து
உங்கள் இடைவெளியில் முன்னேற்றம்
அடைந்த என் வாழ்கையில்
நீங்கள் உங்கள் முதுமையில்
வாழ்ந்திட விரும்புகிறேன்.
என் மனமார்த்த சமர்ப்பணம் !
உங்கள் அன்பு மகளிடம் இருந்து !!

2 comments:

கவிதைகள், அழகை தேடி....... said...

valthukkal..............un tamilukum un pasathirkum...........

Priya said...

mikka nandri anna :) :)

Post a Comment

 
Copyright © Ma Ministry